/* */

கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள் அவதி

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெய்யூர் கொஸ்சதலை ஆற்றின் தரைப்பலம் துண்டிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள் அவதி
X

கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மெய்யூர் பகுதியில் உள்ள தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலம் அம்மபள்ளியில் இருந்து மழையின் நீர்வரத்து காரணமாகவும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை காரணமாகவும் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் அணையின் முழு கொள்ளளாவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2815 மில்லியன் கன தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் அணையில் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ள காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 2000 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று காலை வினாடிக்கு 1000 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் பகுதியில் உள்ள தரைப்பாலம் உபரி நீர் கரைப்புரண்டு ஓடியதால் துண்டிக்கப்பட்டது.

இதனால் மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம் அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் - மெய்யூர் போக்குவரத்து இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்கள் திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாக செல்ல வேண்டும் அவ்வாறு இவர்கள் செல்ல 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிகொண்டு செல்ல வேண்டும், மேலும் உடைந்த பாலத்தை மக்கள் யாரும் கடக்காமல் இருக்கவும் அதனால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் சாலையின் இரு புறமும் தடுப்பு அமைத்து காவல் துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Updated On: 5 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!