/* */

பேருந்தில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்.. கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கைது…

கும்மிடிப்பூண்டி அருகே போலீஸார் மேற்கொண்ட சோதனையின்போது, பேருந்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பேருந்தில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்.. கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கைது…
X

கும்மிடிப்பூண்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைதானவர்கள்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் ஜெப தாஸ் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்னை நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்தை மடக்கி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பேருந்தில் பயணம் செய்த 3 பேரிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும், மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (30), மதுரை சேர்ந்த வேல்முருகன் (29), சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த கமல்குமார் (32) என்பதும் தெரியவந்தது.

பின்பு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் மூன்று பேரையும், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், போலீஸார் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு போதைப் பொருட்களை கடத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப் பொருட்கள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற கடத்தல் செயல்களை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Dec 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!