/* */

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம்
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் திருச்சி சிவா எம்.பி.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திராவிட கொள்கை பற்றாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிடம் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது தி.மு.க.வின் 5கட்டளைகளை திருச்சி சிவா வாசிக்க இளைஞர்கள் அனைவரும் உறுதிமொழி ஒரே குரலில் வாசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சட்டத்தின் மாண்புகள் மங்கி வருகிறது என்றார்.

குடியரசுத் தலைவர் அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்றும் அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்ற ஒருவர் வர வேண்டும் என்று யஸ்வந்த் சின்கா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யஸ்வந்த் சின்கா வெற்றி பெற்று எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் எனவும் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்வரும் 2024 பொது தேர்தலுக்கு முன்னோட்டம் என கூறலாம் என்றார்.

பா.ஜ.க.வின் குதிரை பேரம் குறித்த கேள்விக்கு பல மாநிலங்களில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் ஏதேதோ செய்கிறார்கள் என்றார். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பளித்து மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் வேறு வேறாக உள்ளது எனவும், நாடாளுமன்றத்தில் இருப்பார் ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் எனவும் திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.

Updated On: 29 Jun 2022 3:00 AM GMT

Related News