Begin typing your search above and press return to search.
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தனியார் கல்லூரி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கும்மிடி ப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெருவாயல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது55) இவர் கவரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு தனது மோட் டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.இதுகுறித்து கவரப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.