திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பா.ஜ. அரசுக்கு எதிராக தீர்மானம்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பா.ஜ. அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பி.ஜே.பி. அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிபெரியபாளையத்தில் உள்ள எல்.கே.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.மூர்த்தி தலைமை தாங்கினார்.இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சத்தியநாராயணன்,மாவட்ட பொதுச் செயலாளர் சிவன் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோதி சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில்,ஜி.ராமதாஸ்,இ.டேவிட்செல்லதுரை,ஜெ.சேட்,எஸ்.மூர்த்தி,பி.பாபு,சுப்ரமணி உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டனர்.
இதில்,ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும்,பி.ஜே.பி. அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டிப்பது என்றும்,இச்செயல்களை கண்டிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகிம்சை வழியில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கு உறுதுணையாக நிற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எல்லாபுரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.