/* */

லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டு முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு

கடந்த 9 மாத காலமாக நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைகழித்ததாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டு முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு
X

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டுக் கொண்டு அரை நிர்வாணத்துடன் முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டுக் கொண்டு அரை நிர்வாணத்துடன் முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி( 66 ) விவசாய இவருக்கு 6 சென்ட் வீட்டு நிலம் உள்ளது. இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ள நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் நிலத்தை அளவீடு செய்ய கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9 மாத காலமாக நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைகழித்ததாக கூறப்படுகிறது தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் முதியவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் நிலத்தை அளவீடு செய்வதில் தாமதம் நிலவி வருவதாக தெரிகிறது. மேலும் நிலத்தை அளக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கெட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் லஞ்சம் வழங்க பணமில்லாததால் முதியவர் இன்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள அண்ணாசிலை அருகே சட்டியுடன் நிலத்தை அளக்க பிச்சை வழங்குமாறு பதாகை ஏந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்தார். இதனால் கும்மிடிப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் முதியவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முதியவர் பட்டை நாமம் போட்டு கொண்டு பிச்சை எடுத்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




Updated On: 25 April 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்