/* */

சென்னையில் மின்சார ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Seized - சென்னையில் மின்சார ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் மின்சார ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்
X

பைல் படம்.

Ganja Seized -திருவள்ளூர் மாவட்டம் சூளூர்பேட்டையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் மின்சார ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பெயரில் தனிப்படை துணை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் அவ்வழியாக செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் சோதனை நடத்தினர். அப்போது சூலூர் பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது போலீசார் அதில் சோதனை செய்ததில் 14 பிளாஸ்டிக் பொட்டலங்கள் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜித்குமார் சரண் (21) கும்மிடிப்பூண்டி மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (34) ஆகியோர் கஞ்சா கடத்தி தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Sep 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?