/* */

காட்டுப்பாக்கத்தில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் நகை கொள்ளை

காட்டுப்பாக்கத்தில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

காட்டுப்பாக்கத்தில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் நகை கொள்ளை
X

பைல் படம்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நல்லூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மனோஜ் பிரபாகரன். நேற்று இவரது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அடையாறு சென்று விட்டார்.

பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் பொருட்கள் எல்லாம் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது வீட்டின் மாடியில் இருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 67 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர்.

இதில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டிற்கு தெரியாத நபர் யாராவது வந்தால் வீட்டை பாதுகாக்க விலை உயர்ந்த நாய் வளர்த்து வந்துள்ளனர். பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு முன்பாக நாய்க்கும் பிரியாணி உணவை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால் பிரியாணியை சாப்பிட்ட நாய் கொள்ளையர்கள் வந்தது குறித்து சத்தம் எதுவும் போடாமல் அமைதியாக இருந்துள்ளது.

Updated On: 10 Sep 2021 1:59 PM GMT

Related News