/* */

கார் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு! இருவர் கைது!

திருமணம் மீறிய உறவில் கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது! போலீஸ் விசாரணை.

HIGHLIGHTS

கார் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு! இருவர் கைது!
X

ஆவடி அருகே திருமணம் மீறிய உறவு காரணமாக காதலி கண் முன்னே காதலன் வெட்டி படுகொலை செய்த இருவர் கைது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருமிசை பகுதியில் வசித்து வருபவர் சத்யா (39), இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஜெயலட்சுமி(25) ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் சத்யா மற்றும் விஜயலட்சுமிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி கணவனை சத்யாவை பிரிந்து ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இவருக்கு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த அதே பகுதியைச் சுரேஷ் குமார்(29) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது. இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இதனை அறிந்த விஜயலட்சுமியின் கணவர் சத்யா சுரேஷ்குமாரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து கூட்டாளிகளை அனுப்பி வைத்துள்ளார். சம்பவத்தன்று காலையில் சுரேஷ்குமார் வேலைக்கு கிளம்பிய போது திடீரென ஒரு மர்ம கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்கச் சென்ற விஜயலட்சுமிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.

பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்து வைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விஜயலட்சுமி அலறி கூச்சலிட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மர்ம நபர்கள் அவர்கள் வந்த வாகனத்தில் ஏரி தப்பிச்சென்றனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உயிரிழந்த சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த விஜயலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், விசாரணையில் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் சத்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும், நீதிமன்றம் இருவரை சேர்ந்து வாழ அறிவுறுத்தியதாகவும், இதில் விருப்பமில்லாத விஜயலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, கார் ஓட்டுநர் சுரேஷ்குமார் உடன் குடும்ப நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனை அறிந்த சத்யா தூண்டுதலின் பேரில் அவரது உறவினர்களான சிவராமன், சரவணன் மற்றும் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுரேஷ்குமாரை வெட்டி கொலை செய்ததாக தெரிய வந்தது.

இதனை அடுத்து விஜயலட்சுமியின் கணவர் சத்யா, அவரது உறவினர் சிவராமன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சரவணன் மற்றும் மீதமுள்ள கூட்டாளிகளை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 July 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!