/* */

திருநின்றவூரில் சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது

திருநின்றவூர் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.

HIGHLIGHTS

திருநின்றவூரில் சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
X

திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த இவர் கடந்த மாதம் 24ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இது குறித்துத் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த கௌதம் என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, திருநின்றவூரில் உள்ள பவானி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் அவர் புதுச்சத்திரம் பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து அங்கு தங்க வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருநின்றவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி நேற்று காலை கௌதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 Jun 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து