/* */

ஆவடியில் ரூ.9.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர் நாசர் அடிக்கல்

ஆவடியில் ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட பணிகளை அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

ஆவடியில் ரூ.9.5 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர் நாசர் அடிக்கல்
X

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டுமென ஆசிரியர்களும், மாணவர்களும், மாணவர்கள் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிக்கு ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 39 வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 33.வது வார்டு கோணம் பேடு மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.

அதேபோல் 15 ஆவது நிதி குழு மானியத்தின் கீழ் ரூபாய் 4.கோடி மதிப்பீட்டில் சுமார் 35 சாலைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ்.1.28 மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக முப்பதாவது வார்டு பிருந்தாவன் காலனி பகுதியில் தார் சாலை பணிகளையும் 15 வது வார்டு மருதம் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்து பணிகளை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், கிழக்கு பகுதி செயலாளர் கோபி சேகர், பகுதி செயலாளர் பொன் விஜயன், ராஜேந்திரன், மண்டல குழு தலைவர் அமுதா கோபி சேகர், ஜோதி லட்சுமி, பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 6 May 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?