/* */

ஆவடி: மொபிஸ் இந்தியா நிறுவனம் ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

ஆவடி அரசு மருத்துவமனைக்கு மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆவடி: மொபிஸ் இந்தியா நிறுவனம் ரூ.1.37 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!
X

ஆவடி அரசு மருத்துவமனைக்கு மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் 1.37 கோடியில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் நாசரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் நிதி உதவியையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஹூண்டாயின் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு ரூ.1கோடியே 37லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் கருவிகள், கட்டில் மெத்தை உள்ளிட்ட பெருட்கள் இன்று வழங்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம், மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் மனிதவள துறை தலைவர் பிரேம்சாய், நிதித்துறை தலைவர் செந்தில் ராஜ்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த உபகரணங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பொன்னையா, மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jun 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு
  4. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  5. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  6. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  7. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  8. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  9. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை