/* */

ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை

ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் சரவணன்

சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் சரவணன். இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பூம்பொழில் நகரில் நேரு தெருவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற பெண்ணோடு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது இவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலரான சரவணன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் சூதாடி அதிக அளவில் பணம் தொலைத்த வேதனையில் இருந்த சரவணன், பணியில் இருக்கும் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் இறந்துபோன சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சூதாட்டத்தில் பணம் தொலைத்த வேதனையில் தன் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் வெறும் அதிர்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 8 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு