/* */

மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி

மதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி
X

திருப்பூர் துரைசாமி.

மதிமுக கட்சியின் அவைத் தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. அவர் கட்சி தலைமையுடன் மனக்கசப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதியன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், உங்களின் அண்மைக் கால நடவடிக்கைகளால், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை, அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது. அதனால் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரின் அந்த கடிதத்திற்கு பதிலளித்த வைகோ, திமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதனால் திருப்பூர் துரைசாமியின் கோரிக்கையை அலட்சியப்படுத்துவதாகவும், நிராகரிக்கப்பதாகவும் கூறியிருந்தார். துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தமது சுயநலத்திற்காக அறிக்கை விடுத்துள்ள திருப்பூர் துரைசாமியை அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி கடிதம் எழுதி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இதனால் திருப்பூர் துரைசாமியை மதிமுகவிலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இதனையடுத்து கடந்த மாதம் மே 3-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் துரைசாமி தான் பொது வாழ்க்கையில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மதிமுக துவங்கப்பட்ட காலத்தில் இருந்து உங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் கட்சி பதவிக்கு வர மாட்டார்கள் என்று தொடர்ந்து பேசி வந்தீர்கள். அதை தலைமைக்கழக நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் முழுவதுமாக நம்பினார்கள். பிற்காலத்தில் உங்களின் தவறான அரசியல் நிலைப்பாடு காரணமாக தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.

மதிமுக துவங்கப்பட்ட காலத்திலிருந்து சட்ட மன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி மன்ற தேர்தல்களின் போது தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி என தனித்தனியாக நிதி திரட்டியுள்ளோம். ஆனால் நீங்கள் ஒருமுறை உயர்நிலைக்குழு கூட்டத்திலோ, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலோ, பொதுக்குழு கூட்டத்திலோ வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதில்லை.

பரந்த ஜனநாயகம் பேசிய நீங்கள், கட்சிக்கென்று பொருளாளர் இருந்தும், அவர் கையொப்பமின்றி நீங்களாகவே 17 ஆண்டுகளுக்கு மேலாக காசோலைகளில் தன்னிச்சையாக கையொப்பமிட்டு வங்கியில் பணம் எடுத்து வருகிறீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இது போன்ற தவறு நடக்கவில்லை. பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்று நீங்கள் முழங்கிவிட்டு அவற்றை மனசாட்சியின்றி காற்றில் பறக்கவிட்டு இப்படி சுயநலமாக நீங்கள் இருப்பீர்கள் என்று கழக தோழர்கள் யாரும் நினைக்கவில்லை.

பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்துவந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே தி.மு.க.வுடன் இணைத்துவிடுவது நல்லது. கடந்த 30 ஆண்டுகளாக ஏமாற்றியதை போல், இனியும் ஏமாற்ற வேண்டாம் என உங்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டு இன்று முதல் ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலும் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் திருப்பூர் துரைசாமி கூறியுள்ளார்.

Updated On: 1 Jun 2023 5:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்