/* */

உடுமலையில் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்; ஸ்டாலினுக்கு ‘பறந்த’ புகார் மனு

tirupur News, tirupur News today- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கு காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அவதிப்படும் பொதுமக்கள், தமிழக முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பினர்.

HIGHLIGHTS

உடுமலையில் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்; ஸ்டாலினுக்கு ‘பறந்த’ புகார் மனு
X

tirupur News, tirupur News today- உடுமலையில் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்; மக்கள் வேதனை (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- திருப்பூர் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, தமிழக முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொழில் நிமித்தமாகவும் பல்வேறு பணிகளுக்காகவும் உடுமலை நகருக்கு வருகின்றனர். மேலும், பல சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உடுமலையில் படித்து வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து கிராமப்புற பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,

பொதுவாக காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். அந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கூடுதல் பஸ்களை இயக்குவதற்குப் பதிலாக, கடந்த சில மாதங்களாக ஏற்கனவே கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பஸ் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ஆட்கள் பற்றாக்குறை, பஸ் பழுது என ஏதேனும் மழுப்பலான பதில் சொல்கின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் பஸ்களில் உயிரைப் பணயம் வைத்து, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

பள்ளி குழந்தைகளும், பெண்களும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதால் இதுபோன்ற கிராமப்புற பஸ்களில் வருவாய் குறைவாக இருப்பது பஸ்கள் இயக்கம் குறைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து கிராமப்புற வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

இந்தநிலையில் உடுமலையை அடுத்த புங்கமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் பூலாங்கிணறு, பாப்பனூத்து, விளாமரத்துப்பட்டி, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி, கரட்டுமடம், தேவனூர்புதூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்பட்ட பல பஸ்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கிராமப்புற மக்களின் போக்குவரத்தில், அரசு டவுன் பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பணி சார்ந்தும், தொழில், வியாபாரம் சார்ந்தும் பலரும் பஸ்களில் தினமும் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏழை எளிய மக்கள், பஸ்களையே நம்பியுள்ள நிலையில், பஸ்களின் போக்குவரத்தை, கிராமப்புறங்களுக்கு அதன் இயக்கத்தை நிறுத்துவது பல விதங்களில் கிராமப்புற மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

Updated On: 18 March 2023 5:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!