Begin typing your search above and press return to search.
திருமூர்த்தி அணையில் நீர்வரத்து குறைவு
மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணைப்பகுதியில், கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் பல முறை நிரம்பி, உபரி நீர் திறந்து விட்டது. இதனால் பாசனம் பகுதி சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணைநீர் வந்ததால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதை குறைத்தனர்.
தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியிருக்கிறது. 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், 52 அடியாக உள்ளது.மழை குறைந்ததால், அமராவதி ஆற்றில் நீர்மட்டம் குறைய துவங்கி இருப்பது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.