Begin typing your search above and press return to search.
மாற்று இடம் வழங்க கோரி உடுமலை நகராட்சியில் மனு
மாற்று இடம் வழங்க கோரி 15 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உடுமலை நகராட்சியில் மனு வழங்கினர்.
HIGHLIGHTS
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சாதிக் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் இந்த குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க கோரி அப்பகுதியில் வசிப்பவர்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கிடையில், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் உடுமலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடந்தது.