/* */

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
X

பஞ்சலிங்க அருவி (பைல் படம்).

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மூலிகை கலந்த தண்ணீர் வருவதால், அருவியில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கொரோனா பிரச்னை காரணமாக , அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அருவியில் குளிக்க தடை விதிப்பதால், பல மாதங்களாக அருவி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்,அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Updated On: 16 Oct 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...