/* */

அமணலிங்கேஸ்வரர் கோவிலை மூழ்கடித்த பஞ்சலிங்க அருவி

பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

HIGHLIGHTS

அமணலிங்கேஸ்வரர் கோவிலை மூழ்கடித்த பஞ்சலிங்க அருவி
X

வெள்ளத்தில் மூழ்கிய அமணலிங்கேஸ்வரர் கோவில்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் கனமழை பெய்ய துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே, உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கால் அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாலத்தை கடந்து வெள்ளம் சென்று கொண்டு இருப்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.


Updated On: 21 Oct 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?