/* */

உடுமலையில் நெல் நடவு பணி தீவிரம்

உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டடுள்ளதால் நெல் நடவு பணி தீவிரமடைந்து உள்ளது.

HIGHLIGHTS

உடுமலையில் நெல் நடவு பணி தீவிரம்
X

உடுமலையில் நடவு பணி முடிந்துள்ள விவசாய நிலம்.

உடுமலை அருகே கல்லாபுரம் சுற்றுப்பகுதியில் மூன்று போகத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் நேரத்தில் 1200 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு பருவமழையால், அமராவதி அணை நிரம்பி, பாசனத்துக்கு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தயார் நிலையில் இருந்த விவசாயிகள் நாற்றாங்கால் பிடிங்கி நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கல்லாபுரம் பகுதியில் நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளது. நடவு கூலி உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் பற்றாகுறை நிலவுகிறது. நடப்பாண்டு அமராவதி அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.


Updated On: 26 Aug 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்