/* */

இழப்பீடு தராமல் மின்கோபுரப்பணிகள் - உடுமலை அருகே விவசாயிகள் போராட்டம்

உடுமலைப்பேட்டை அருகே, உரிய இழப்பீடு தராமல் மின் கோபுரம் அமைக்கும் பணியை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இழப்பீடு தராமல் மின்கோபுரப்பணிகள் - உடுமலை அருகே விவசாயிகள் போராட்டம்
X

உடுமலை அருகே மூங்கில் தொழுவு பகுதியில், இழப்பீடு தராமல் மின்கோபுரம் அமைக்கும் பணியை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.  

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மூங்கில் தொழுவு பகுதியில், மத்திய அரசு மற்றும் பவர்கிரிட் நிறுவனம் இணைந்து இடையார்பாளையம் முதல் மைவாடி வரை 400KV உயர்மின் கோபுர திட்டத்தை மேற்கொள்கின்றன.

இந்த பணிகளுக்கு, நிலத்திற்கான எந்தவித இழப்பீடும் தராமல், நிறுவனம் தரப்பில் பணிகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் அப்பகுதிக்கு வந்தனர்.

மின்கோபுரம் அமைக்க நிலம் கையகம் செய்த விவசாயிகளுக்கு, நிலத்திற்கான உரிய இழப்பீட்டுத்தொகை கொடுத்த பிறகு நிலத்திற்குள் வர வேண்டும் என்று கூறி, ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், ஒருசிலர் உயர்மின் கோபுரங்கள் மீது ஏறி கோஷமிட்டனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  2. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  3. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  5. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  7. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  8. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  9. காஞ்சிபுரம்
    எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வீட்டில் இருந்தே மாணவர்கள் நுழைவுத்...
  10. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...