/* */

பீட்ரூட் சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரம்

உடுமலை சுற்று வட்டார பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

பீட்ரூட் சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரம்
X

உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் அமராவதி, திருமூர்த்தி அணைகள் பாசனம் மற்றும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய சாகுபடி நடக்கிறது. தென்னை வாழை கரும்பு நெல் சப்போட்டா மா போன்ற பயிர்களும் கத்தரி வெண்டை, அவரை தக்காளி பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் கீரை வகைகளும் மானாவாரியாக கம்பு சோளம் உளுந்து எள் போன்ற தானியங்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்து வருவதால், நடப்பு பருவத்துக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி அணை பாசனத்தில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணையின் 3ம் மண்டல பாசனத்தில் தக்காளி, பீட்ரூட் அவரை போன்ற காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை சுற்று வட்டாரப்பகுதியில் பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முறை பீட்ரூட் சாகுபடி கைகொடுக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 April 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு