யாரா இருந்தா என்ன? உடுமலையில் அமைச்சர் கார் சோதனை

உடுமலையில் அமைச்சரின் காரையும் நிறுத்தி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
யாரா  இருந்தா என்ன?  உடுமலையில் அமைச்சர் கார் சோதனை
X

உடுமலையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காரை தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழக சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. எமுறையாக விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ பதிவு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஆங்காங்கு திடீர் சோதனைகளை நடத்துவார்கள்.

அந்த வகையில் நேற்று உடுமலை நகரில் தளி சாலையில் டி.வி.பட்டிணம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் உடுமலை சட்டமன்றத்தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரும், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பிரசத்திற்காக தளி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பறக்கும்படையினர் அமைச்சரின் காரையும் மற்ற கார்களை போலவே சோதனை செய்தனர். ஆனால் அமைச்சரின் காரில் பணமோ, பரிசுப்பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனைக்கு பின்னர், அவர் பிரசாரத்திற்கு சென்றார்.

Updated On: 30 March 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    சிங்காநல்லூரில் போக்குவரத்து மாற்றம்: சோதனை ஓட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
  4. உடுமலைப்பேட்டை
    உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
  5. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  7. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  8. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  9. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை