Begin typing your search above and press return to search.
உ.பி.,சம்பவத்தை கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து அனைத்து விவசாயிகள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS

உத்தரபிரதேசத்தில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏறியதில் 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் அமைப்பு சார்பில் உடுமலை பெரிய வாளவாடி ஊராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ரங்கநாதன் தலைமை வகித்தார். உடுமலை ஒன்றிய கவுன்சிலர் நவநீதிகிருஷ்ணன், மகேஷ், மதிமுக., ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.