உடுமலை: மழையால் பாதித்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடுமலை: மழையால் பாதித்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு
X

உடுமலையில், அண்மையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்த ஆய்வு நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் பாசனவசதி மூலம் உடுமலை சுற்று வட்டாரத்தில் கல்லாபுரம், அமராவதி, எலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நெல் அறுவடை தயாராக இருந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தது.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையின் அடிப்படையில், வேளாண்மை துணை இயக்குனர் வடிவேல், உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், 33, சதவீதத்துக்கு மேல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து வேளாண்மை அலுவலர்கள் மதிப்பீடு செய்தனர். 33, சதவீத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்றும், அதற்கு கீழ் இருந்தால் நிவாரணம் கிடைக்காது. அதற்கு தகுந்தாற்போல் நெற்பயிர்கள் அறுவடை மேற்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Jun 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  3. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  4. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  5. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
  6. சோழவந்தான்
    பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா
  7. இந்தியா
    சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு?
  8. கோவை மாநகர்
    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே பெண்கள் நடத்திய கோவில்...
  9. முசிறி
    தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் மோதல்: 12 பேர் கைது
  10. டாக்டர் சார்
    fexofenadine hydrochloride uses in tamil ஆஸ்துமா , தோல் நோய்,அலர்ஜி ...