தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு

உடுமலைப்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற , தடுப்பூசி போடும்போது சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு
X

உடுமலைப்பேட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில், டோக்கன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவில்லை என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதும்க்கள்.  

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று காலை 6 மணி முதலே, டோக்கன் பெற்றவர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு சென்றனர்.

இந்நிலையில் டோக்கன் இல்லாமல் சில முக்கிய பிரமுகர்கள் வந்து, கியூ வரிசையில் நிற்காமல் தடுப்பூசி போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தடுப்பூசி போட வந்தவர்கள், அங்கிருந்த சுகாதார பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் சிலர் கூறுகையில், நாங்கள் பல நாட்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் பெற்றோம். டோக்கனில் தேதியிட்டு வழங்கப்பட்டது. அதன்படி, இன்று காலையிலேயே வந்து வரிசையில் நின்றோம். தடுப்பூசி போடும் பணி நடந்தபோது, முக்கிய பிரமுகர்கள் என கூறி, வரிசையில் நிற்காமல் உள்ளே சென்று தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

டோக்கன் வாங்கிக்கொண்டு நீண்ட நேரம் கியூ வரிசையில்நாங்கள் காத்திருக்கிறோம். எவ்வளவு டோஸ் வந்து உள்ளது என்பது கூட தெரியவில்லை. டோஸ் தீர்ந்து விட்டால், அடுத்த முறை வாருங்கள் என்று அனுப்பி விடுவார்கள். எனவே, டோக்கன் வழங்கியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும், என்றனர்.

Updated On: 4 Jun 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  2. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  3. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  5. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  6. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  7. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  8. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  9. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  10. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!