/* */

உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து

உடுமலை : பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து
X

உடுமலைபேட்டையிலுள்ள பிரபல துணிக்கடையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருகோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சீனிவாசா வீதியில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், துணிக்கடையின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்து புகை வருவதை கவனித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.தொடர்ந்து துணிகளில் ஏற்பட்ட தீயை உலர வைக்கும் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.அதிகாலை நேரம் பொதுமக்கள் இல்லாததாலும், துணிக்கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On: 7 Jan 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து