/* */

திருப்பூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி பொறுப்பேற்பு

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சாமிநாதன், பொறுப்பேற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்.பி பொறுப்பேற்பு
X

Tirupur News. Tirupur News Today-புதிதாக பொறுப்பேற்ற திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சாமிநாதன் பொறுப்பேற்றார்.

திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியாற்றிய ஷசாங் சாய் விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பாதுகாப்பு பிரிவு போலீஸ் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பியாக சாமிநாதன் நேற்று, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பை நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளர்.

கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு போலீஸ் நேரடி டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். பின்னர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சென்னை அண்ணாநகரில் உதவி ஆணையாளராக பணியாற்றினார். 2007-ம் ஆண்டு போலீஸ் ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று, பாதுகாப்பு பிரிவிலும், விருதுநகர் மாவட்ட போலீஸ் ஏ.எஸ்.பி ஆகவும் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு போலீஸ் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை கமிஷனராகவும், அதன்பிறகு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் எஸ்.பி ஆகவும் பணியாற்றினார்.

அதன்பிறகு சென்னை போக்குவரத்து துணை கமிஷனராகவும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையிலும் பணியாற்றி 2021-ம் ஆண்டு முதல் பாதுகாப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி ஆக பணியாற்றியுள்ளார். புதிதாக, திருப்பூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன், 'மாவட்டம் முழுவதும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.' என்றார்.

Updated On: 25 May 2023 12:16 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!