/* */

எகிறியது எலுமிச்சம்பழம் விலை; திருப்பூரில் கிலோ ரூ. 160க்கு விற்பனை

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் எலுமிச்சம்பழத்தின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

எகிறியது எலுமிச்சம்பழம் விலை; திருப்பூரில் கிலோ ரூ. 160க்கு விற்பனை
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரிப்பு.  

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சமீபத்தில், சில தினங்கள் மட்டும் மழை பெய்த நிலையில், சற்று வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. தற்போது அக்னி நட்சத்திர வெயில் காரணமாக கத்தரி வெயில் அனைவரையும் வாட்டி எடுத்து வருகிறது. காலை முதல் மாலை வரைக்கும் வெயில் உக்கிரமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக மதிய வேளையில் உச்சந்தலையை சுட்டெரிப்பது போல் வெயிலின் தாக்கம் இருக்கிறது. உச்சி வெயிலால் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறான நேரங்களில் குளிர்ச்சியான பானங்களை அருந்தி, மக்கள் தங்கள் தாகத்தை தணித்துக்கொள்கின்றனர்.

திருப்பூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலுக்கு இதம் தரும் இளநீர், தர்பூசணி, நுங்கு, சர்பத், மோர், பழரசங்கள் மற்றும் பல்வேறு குளிர்ச்சி தரும் பானங்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் எலுமிச்சம்பழத்தின் பங்கும் அதிகமாக இருப்பதால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் எலுமிச்சம்பழம், சர்க்கரை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் லெமன் ஜூஸை விரும்பிக் குடிக்கின்றனர். இதை மிக எளிதாக வீடுகளிலேயே தயாித்து விடலாம் என்பதால், வீடுகளில் இல்லத்தரசிகளே லெமன் ஜூஸ் தயார் செய்து, பிரிட்ஜ்களில் வைத்திருந்து, வெயில் நேரங்களில், வீட்டில் உள்ளவர்கள் அருந்தி, தாகம் தீர்த்துக்கொள்கின்றனர். வெயில் காலத்தில் குடிநீர் குடித்தால், தாகமே அடங்காத நிலையில், எலுமிச்சை சாறு கலந்த ஜூஸ், சில மணி நேரங்களுக்கு தாகத்தை முழுமையாக தணித்து, இயல்பாக இருக்க வைக்கிறது. ஜூஸ் கடைகளிலும், பலரது தேர்வு லெமன் ஜூஸ் ஆக மட்டுமே இருக்கிறதால், கடைகளிலும் அதிகளவில் லெமன் ஜூஸ் தயாரிக்கப்பட்டு, ஒரு டம்ளர் ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. சாதாரண காலங்களில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இதன் விலை மேலும் அதிகரித்துள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது எலுமிச்சை வரத்து தட்டுப்பாடின்றி இருப்பதால், பெரிய அளவில் விலை உயர்வு ஏற்படவில்லை. கடந்த காலங்களில் கோடை நேரத்தில் எலுமிச்சை வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.300 வரைக்கும் விற்பனையானதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது பெரும்பாலான கடைகளில் எலுமிச்சம்பழம் எண்ணிக்கை அளவில் கொடுப்பதற்கு பதிலாக, எடையளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கால்கிலோ, அரை கிலோ என்ற எடை அளவில், பலரும் எலுமிச்சம் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Updated On: 18 May 2023 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்