Begin typing your search above and press return to search.
திருப்பூரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
திருப்பூரில் ஆட்டோ டிரைவர் கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த தேனூர் பெரியமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,27. இவர், திருப்பூரில் தங்கி ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பூர் மேட்டுபாளையம் பகுதியில் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கொலை தொடர்பாக, அவரது நண்பர்கள் நன்னுபிரசாத்,24, சித்திக்பாஷா,30, மனோஜ்,21, ஆகிய மூவரை கைது செய்தவர். போலீஸார் விசாரணையில், திருடிய பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில், இந்த கொலை நடந்து உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.