/* */

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது

திருப்பூரில், பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது
X

திருப்பூரில், குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளி கைது.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், அந்த குழந்தையிடம் நைசாக பேசி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கண்ட குழந்தையின் தாய் கூச்சல் போட்டதும், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து, திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சகுபர் சாதிக் என்பதும், அவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் 3 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சகுபர் சாதிக்கை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Sep 2022 5:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  2. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  3. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  4. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  6. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  7. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  8. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  10. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...