/* */

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்

திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர், கட்சி தலைமையகத்தில் விருப்ப மனுவை வழங்கினர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தல் : விருப்ப மனு வழங்கிய திருப்பூர் பாஜகவினர்
X
திருப்பூரில் விருப்ப மனு வழங்கிய பாஜகவினர். 

அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் பா.ஜ.க வடக்கு மாவட்டம் சார்பாக, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வது வார்டில் போட்டியிட தாரணி பாலகிருஷ்ணன் விருப்ப மனுவை, மாவட்ட தலைவர் செந்தில்வேலிடம் அளித்தார். அவிநாசி போரூராட்சி 14 வது வார்டில் ஊடக பிரிவு மாவட்ட பொருளாளர் சந்துருவின் மனைவி, கவிதா சந்துருவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அளித்தார்.


பல்லடம் நகர பாஜக சார்பாக, நகரத் தலைவர் வடிவேலன் தலைமையில், விருப்ப மனுவை, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.சி.எம்.பி. , சீனிவாசன், கதிர்வேல், மாவட்டச் செயலாளர் வினோத் வெங்கடேஷ் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது. ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் மனோகரன், வீரபாண்டி மண்டல தலைவர் மகேஷ், கிளை தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், மேலும் பல பாஜக நிர்வாகிகள், விருப்ப மனுவை வழங்கினர்.

Updated On: 30 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!