/* */

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது

திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வடமாநில தொழிலாளியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
X

திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வடமாநில தொழிலாளியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் சம்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவம் பட்நாயக் (வயது 24). இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில், டெய்லராக வேலை செய்துள்ளார். இடுவம்பாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று வந்தபோது, அப்பகுதியில் 10ம் வகுப்பு படித்த சிறுமியிடம், அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, மூன்று மாதத்துக்கு முன், ஒடிசா மாநிலத்துக்கு அழைத்து சென்று விட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருப்பூர் மத்திய போலீசாரிடம் புகார் அளித்தனர். ஒடிசா சென்ற போலீசார், இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அனுப்பினர். இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை நடத்தி, சிறுமியை ஏமாற்றிய சிவம் பட்நாயக் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Updated On: 7 Aug 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...