/* */

‘கம்பராமாயணம் கேட்டால், படித்தால் ஞானமும், புகழும் உண்டாகும்’ - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பெருமிதம்

Tirupur News,Tirupur News Today- கம்பராமாயணத்தைப் படிப்பவா்கள், கேட்பவா்கள், சொல்பவா்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறுவதுடன், ஞானமும், புகழும் உண்டாகும் என, ஆன்மிக சொற்பொழிவாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினார்.

HIGHLIGHTS

‘கம்பராமாயணம் கேட்டால், படித்தால் ஞானமும், புகழும் உண்டாகும்’ - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பெருமிதம்
X

Tirupur News,Tirupur News Today- ஆன்மிக சொற்பொழிவாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில், 15-ம் ஆண்டு கம்பன் விழா நடந்தது.

திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், ஆன்மிக சொற்பொழிவாளர் ‘கம்பவாரிதி’ இலங்கை ஜெயராஜ் பங்கேற்று பேசியதாவது,

மனிதா்களுக்கு புலன்களை அடக்குவது சாதாரண காரியம் அல்ல. உலகத்தில் எதை வேண்டுமானாலும் அடக்கிவிடலாம். தன்னைத்தானே அடக்குவதுதான் மிகவும் சிரமமான காரியம். எனவே, மற்றவா்களை அடக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தன்னைத்தானே அடக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உலகம் மிகவும் சரியானதாக மாறிவிடும்.

மரபு இலக்கியங்களைப் பாடிய புலவா்கள் தமிழைத் தெய்வமாக நினைத்து பாடினா். ஒரு பொய்யான சொல்லைக்கூட சொல்லமாட்டாா்கள். அக்காலத்து புலவா்கள் சத்தியத்தை மட்டும் சொன்னதால்தான், காவியங்கள் இன்றளவும் நிற்கின்றன. கம்பராமாயணத்தைப் படிப்பவா்கள், கேட்பவா்கள், சொல்பவா்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறுவதுடன், ஞானமும், புகழும் உண்டாகும்.

மனிதா்கள் கடைசி எல்லையை அடைந்துவிட்டால் தேடுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேடுவதிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடுவாா்கள். இன்றைய இளைஞா்கள் செல்வத்தை தேடும்போது போகத்தையும், புண்ணியத்தையும் இழக்கின்றனர். இளைஞா்கள் நாளை, நாளை என ஓடிக்கொண்டிருக்கும்போது இன்று வீணாகி கொண்டிருக்கிறது.

கம்பராமாயணத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்ப்பது என்பது கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு ஒப்பாகும். கம்பராமாயணத்தைப் படித்தால் முதலில் வாழ்க்கையையும், அடுத்த நிலையில் கடவுளையும் கற்றுத்தருவாா் கம்பா், என்றாா்.

தொடர்ந்து, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. கம்பன் காவியத்தில், கற்போர் நெஞ்சை ப் பெரிதும் நெகிழச் செய்வோர் ‘அயோத்தி பரதனே’, ‘கிஷ்கிந்தை வாலியே’ ‘ இலங்கை கும்ப கர்ணனே’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில், பேச்சாளர்கள் ரசிக்கும்படி பேசினர். இறுதியில், நடுவர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினார்.

இவ்விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Aug 2023 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்