/* */

திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது

திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது
X

பைல் படம்.

திருப்பூரில் செரங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரஞ்சித் என்ற வாலிபர் ரத்த காயங்களுடன் ஓடி வந்தார். இது குறித்து போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தனது நண்பரை பிடித்து வைத்து உள்ளதாக ரஞ்சித் கொடுத்த தகவலில் பேரில், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பார்த்தபோது, சதீஷ் என்ற வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து 4 தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சதீஷ்குமாரின் தலை எம்எஸ் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார்,25, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுபாபிரகாஷ்,23, மதுரை சேர்ந்த மணிகண்டன்,25, திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,24 ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்புஇருக்கிறதா என்பது போலீஸார் விசாரிப்பதாக மாநகர காவல் ஆணையாளர் பாபு தெரிவித்தார்.

Updated On: 15 Feb 2022 3:21 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!