/* */

திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை

திருப்பூர் நகரம், புறநகர் பகுதிகளில் இடியுடன் ஏறத்தாழ ஒருமணி நேரம் கனமழை பெய்தது. அவினாசி, உடுமலையிலும் மழை பெய்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை
X

கோப்பு படம் 

திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்று மாலை 7:15, மணியளவில் லேசான தூரலுடன் பெய்யத் தொடங்கிய மழை, நேரம் செல்லச்செல்ல வலுத்தது. பின்னர் இடி, மின்னலுடன் ஏறத்தாழ ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது.
திருப்பூர் நகரில் திருமுருகன்பூண்டி, புஷ்பா தியேட்டர், காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் மழை நீடித்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. வேலை முடித்து வீடு திரும்புவோர், மழையில் சிக்கிக் கொண்டு ஆங்காங்கே ஒதுங்கினர்.
இதேபோல், புறநகர் பகுதிகளான வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம், புதுப்பாளையம், மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால், இருள் சூழ்ந்து காணப்பட்டது. பொங்கலூர், அவினாசி, உடுமலைப்பேட்டை, பல்லடம் உள்பட, திருப்பூர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், இதே நேரத்தில் மழை பெய்தது.

Updated On: 22 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!