/* */

பல்லடம்; வியாபாரி வீட்டில், பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே, வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

பல்லடம்; வியாபாரி வீட்டில், பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
X

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே, வியாபாரி வீட்டில் 30 சவரன் நகை திருட்டு (மாதிரி படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் ராயல் பார்க் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 63). இவர் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனையாளராக உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் முசிறியில் நடைபெறும் ஒரு விழாவிற்காக சென்றுவிட்டார். இந்நிலையில், அவரது வீட்டின் காம்பவுண்ட் பிரதான மெயின் கேட், வீட்டின் கதவு ஆகியவை திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து செல்போன் மூலம் ராஜேந்திர பிரசாத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் குடும்பத்துடன் பல்லடம் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் நகைகள் திருட்டுப்போயிருந்தது. ராஜேந்திரபிரசாத் வெளியூர் சென்று இருப்பதை நன்கு தெரிந்து கொண்ட நபர்கள், அவருடைய வீட்டிற்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருட்டு நடந்த வீட்டிற்கு போலீசார் வந்து விசாரித்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும், அப்படி பொருத்தப்பட்டிருந்தால் அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 12 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த