/* */

பல்லடம் பகுதியில் அச்சுறுத்தும் தெருநாய்கள்: பொதுமக்கள் பீதி

பல்லடம் பகுதி தெருக்களில் அச்சுறுத்தும் நாய்களால், மக்கள் நடமாட அஞ்சுகின்றனர்.

HIGHLIGHTS

பல்லடம் பகுதியில் அச்சுறுத்தும் தெருநாய்கள்:  பொதுமக்கள் பீதி
X

பல்லடம் நகர வீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வார்டுகளில், தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சராசரியாக, தினசரி, 10 பேர் வீதம் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஒவ்வொரு வீதியிலும், பத்துக்கும் குறையாமல் தெருநாய்கள் உள்ளன. இவை அவ்வப்போது கூட்டமாக அணிவகுத்தபடி, வீதிகளில் உலா வருகின்றன. அவ்வப்போது, ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்வதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. வீதிகளில் விளையாடும் சிறுவர்கள், கடைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் நாய்களின் அச்சுறுத்தலால் பீதி அடைகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தெரு நாய்களை பிடித்துச் செல்லவோ, அல்லது கொல்லவோ அனுமதி கிடையாது. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்,' என்றனர்.

Updated On: 15 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?