/* */

மனைவியை மீட்டுத்தர 'டவர்' மீது ஏறி போராட்டம்

மனைவியை மீட்டுத்தரக்கோரி, மொபைல் போன் டவர் மீது ஏறி நின்று, இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மனைவியை மீட்டுத்தர டவர் மீது ஏறி போராட்டம்
X

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் 100 அடி உயரமுள்ள செல்போன் டவர் உள்ளது. அதன் மீது ஏறிய ஒரு இளைஞர், மாயமான தனது மனைவியை மீட்டுத் தரவேண்டும். இல்லாவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், அந்த இளைஞரை சமாதானப்படுத்தி கீழே வரச் செய்தனர்.

விசாரணையில், அவர் ஈரோடு பகுதியை சேர்ந்த அருளரசன், (28). கடந்த, 3 மாதங்களுக்கு முன், பல்லடம் மகாலட்சுமி நகரில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். 'பொங்கல் பண்டிகைக்காக தாய் வீட்டிற்கு வந்த மனைவியை காணவில்லை எனவும், அவரது உறவினர்கள் கடத்திச் சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக, அவரது மனைவி, மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாக, அந்த இளைஞர் தெரிவித்தார். இதுகுறித்து, அருளரசன் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

Updated On: 22 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  4. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  5. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  6. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  7. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  8. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  10. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...