/* */

குட்டையில் அள்ளப்பட்ட மண்: லாரியை சிறைபிடித்த மக்கள்

குட்டையில் மண் எடுத்ததால் ஆவேசமடைந்த மக்கள், லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்தனர்.

HIGHLIGHTS

குட்டையில் அள்ளப்பட்ட மண்: லாரியை சிறைபிடித்த மக்கள்
X

பல்லடத்தில், குட்டையிலிருந்து மண் எடுத்த லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர். 

பல்லடம், பொள்ளாச்சி சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக, சின்ன வடுகபாளையம் குட்டையில் இருந்து மண் எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குட்டையில் இருந்து மண் எடுக்கக்கூடாது எனக்கூறி, பொதுமக்கள் மண் எடுக்க வந்த வாகனங்களை சிறைபிடித்தனர்.

இதையடுத்து, லாரிகளில் இருந்த மண் மீண்டும் குட்டையில் கொட்டப்பட்டது. நேற்று, மீண்டும் மண் அள்ளும் பணி நடந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஐந்து லாரிகள் மற்றும் இரண்டு பொக்லைன் வாகனங்களை சிறை பிடித்தனர்.

மக்கள் கூறுகையில், ' சாலை விரிவாக்கப்பணி என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள உபரி மண்ணை மட்டும் தான் பயன்படுத்த ஆர்.டி.ஓ., அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி, குட்டையில் இருந்து மண் அள்ளப்பட்டு வருகிறது,'' என்றனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற வட்டாட்சியர் தேவராஜ், பொதுமக்களிடம் விசாரித்தார். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை குட்டையில் மண் இருந்து எடுத்ததற்கு தண்டனையாக, குட்டையை துார்வாரி தர வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரும் இதை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இச்சம்பவத்தால், பல்லடம்–பொள்ளாச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!