/* */

துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கஞ்சா விற்ற கும்பல் கைது; பல்லடத்தில் பரபரப்பு

Tirupur News,Tirupur News Today- விவசாயம் செய்வதாக ஏமாற்றி, கஞ்சா விற்ற கும்பலை துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கஞ்சா விற்ற கும்பல் கைது; பல்லடத்தில் பரபரப்பு
X

Tirupur News,Tirupur News Today- துப்பாக்கி, கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் போலீசாரிடம் பிடிபட்ட நான்கு பேர்.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே, உப்பிலிபாளையம் பகுதியில் எள்ளுக்காடு தோட்டம் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த சபரி, சியாம் என்ற 2 வாலிபர்கள், இந்த தோட்டத்தின் உரிமையாளரை சந்தித்து, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயம் எதுவும் செய்யவில்லை. பொதுமக்கள் கேட்ட போது தற்போது சீசன் இல்லை, மழை சீசனில் விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி உள்ளனர். அப்போது அருகில் வசிக்கும் சிலருடன் நட்பாக பழகி அவர்களையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் துப்பாக்கி, அரிவாள், வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஹாசிம் (வயது 39), அதே பகுதியை சேர்ந்த விபின் தாஸ்(29) ,சிவகங்கையை சேர்ந்த செல்வ கணபதி(27) , அருள்புரம் நவீன் ஆனந்த் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 அரிவாள்,1 துப்பாக்கி. 11 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 200 கிராம் கஞ்சா, 3 மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள சபரி, ஷியாம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் மீது கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. எதிர்தரப்பினர், நீதிமன்றத்தில் வைத்து இவர்களை கொல்ல முயன்றதால் அங்கிருந்து தப்பி, விவசாயிகள் எனக்கூறி, பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் கஞ்சா விற்பனை செய்வதற்கும், தங்களது பாதுகாப்புக்கும் வைத்துக்கொண்டதுடன் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 Jun 2023 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்