Begin typing your search above and press return to search.
கட்டிட தொழிலாளி விபத்தில் பலி
பல்லடம் பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
பல்லடத்தை அடுத்த ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி என்.எச்., ரோட்டில் நேற்றுமுன்தினம் இரவு, மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பல்லடம் போலீசார், அங்கு சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில், இறந்தவர் பல்லடம், இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 52) என்பதும், ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு, வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததும் தெரியவந்தது. பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.