/* */

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி 3ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

HIGHLIGHTS

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு
X

பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 96 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். திருமூர்த்தி அணைக்கு பாலாறில் 3 கன அடியும், காண்டூர் கால்வாயில் 810 கன அடியும் நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. இன்று 3 மண் டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.21 நாட்கள் வழங்கப்பட்டு, பாசன காலம் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 5 May 2021 11:57 AM GMT

Related News