/* */

மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்

மடத்துக்குளம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

HIGHLIGHTS

மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்
X

பைல் படம்.

மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் மதகடி புதூரை சேர்ந்தவர் கிட்டுசாமி, விவசாயி. இவரது மனைவி மயிலாத்தாள்,56. இவர், குமரலிங்கம் குள்ளக்கார் ஓடைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் தென்னை ஓலைகளை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4பேர், மயிலாத்தாள் அணிந்திருந்த நகைகளை கழற்றி தருமாறு மிரட்டினர். அப்போது மயிலாத்தாள் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், மயிலாத்தாள் கையில் வைத்து இருந்த கத்தியை பிடிங்கி, கை மற்றும் தோள் பட்டையில் குத்தினர். அதற்குள் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பொது மக்கள் ஓடி வந்தனர். இதை கண்ட நான்கு பேரும், தப்பி ஓடினர். இதில், 17, வயது சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 3, பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிப்பட்ட சிறுவனை குமரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். மயிலாத்தாள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பி ஓடிய 3, பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  3. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  4. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  5. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  6. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  7. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  8. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  9. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  10. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...