Begin typing your search above and press return to search.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ருத்ரபாளையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், விளைபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மாநில அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை தர வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதேபோல் குடிமங்கலம் அருகே பெத்தாம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.