/* */

உடுமலை அமராவதி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

உடுமலை அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

உடுமலை அமராவதி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்
X

அமராவதி ஆற்றில் பாறையின் மீது படுத்து இருக்கும் முதலை.

உடுமலை அடுத்த மடத்துக்குளம் அரசமரத்தடி பகுதியை சேர்ந்த சிலர் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அமராவதி ஆற்றில் ரயில்வே பாலத்திற்கு கீழ் உள்ள பாறையில் நான்கு அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து இருந்தது. இதை பார்த்த அவர்கள், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என முதலை படுத்து இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமராவதி ஆற்றில் 5 க்கும் மேற்பட்ட முதலைகள் வந்ததாக தகவல் வெளியானது. தற்போது, அமராவதி ஆற்றில் நான்கு அடி நீளமுள்ள முதலை பாறையின் மீது படுத்து இருந்தது. வனத்துறையினர் இந்த முதலையை பிடித்து, உடுமலை முதலைப் பண்ணையில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 13 Oct 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?