/* */

மடத்துகுளம் பகுதியில் மருந்து தெளிப்பு

மடத்துக்குளம் பகுதியில் மருந்து தெளிப்பு பணி

HIGHLIGHTS

மடத்துகுளம் பகுதியில் மருந்து தெளிப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும், தட்டுப்பாடு ஒரு பக்கம் நிலவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் வகையில் வீதி வீதியாக கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் நடக்கிறது. மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியும், தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா படுக்கைகளும் கூடுதலாக அமைக்கப்படுகிறது. வீதி வீதியாக மருந்து தெளிப்புக்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களில் சென்று கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சிலர் கை எந்திரங்களை பயன்படுத்தியும் அடித்து வருகிறார்கள், என்றனர்.


Updated On: 13 May 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்