/* */

2024 பார்லிமெண்ட் தேர்தலோடு தி.மு.க வை அப்புறப்படுத்த வேண்டும்; காங்கயத்தில் அண்ணாமலை வலியுறுத்தல்

Tirupur News- வரும் நாடாளுமன்ற தேர்தலோடு தி.மு.க. அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று, காங்கயத்தில் பாதயாத்திரை நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

HIGHLIGHTS

2024 பார்லிமெண்ட் தேர்தலோடு தி.மு.க வை அப்புறப்படுத்த வேண்டும்;  காங்கயத்தில் அண்ணாமலை வலியுறுத்தல்
X

Tirupur News- காங்கயத்தில், பாதயாத்திரை நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. க தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊர் இங்குதான் உள்ளது. 3 போர்களில் ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றி பெற்று ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் தீரன் சின்னமலை கொல்லப்பட்டார் என்பது வரலாறு. மத்தியில் பா.ஜ க அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளில் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பொருளாதாரத்தில் பாரதம் முன்னேற்றம் கண்டுள்ளது. 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இன்னும் மூன்றாண்டுகளில் 3-வது இடத்திற்கு முன்னேறும்.

சீனா, அமெரிக்காவை விட 2047-ம் ஆண்டு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக பாரதம் இருக்கும். இந்த இலக்கை எட்ட ஊழல் இல்லாத தலைவர் நாட்டை ஆள வேண்டும். இதை எடுத்துச் சொல்வதற்கு தான் இந்த யாத்திரை. அதற்கு 2024-ல் 3-வது முறையாக பாரதிய ஜனதாவை ஆட்சியில், மக்கள் அமர வைக்க வேண்டும்.

தி.மு.க.வை பொறுத்தவரை 29 மாத ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல். எங்கும், எதிலும் ஊழல். திரும்பிய பக்கமெல்லாம் லஞ்சம். வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு அக்கட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 400 எம்.பி.க்களுடன் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அங்கு நமது தமிழக எம்.பி.க்கள் 39 பேர் இருக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசு அதை சோதனை அடிப்படையில் செய்வதாக ஏமாற்றியது. மட்டையுடன் கூடிய தேங்காய் கிலோவுக்கு மத்திய அரசு ரூ.29.50-க்கு விலை நிர்ணயம் செய்தது. ஆனால் மாநில அரசு மட்டை உரித்த தேங்காயை மட்டும் கொள்முதல் செய்தது.

சென்னிமலை பகுதியில் 10 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். அவர்களிடம் பள்ளி சீருடை மற்றும் நூல் கொள்முதல் செய்து கொள்கிறோம் என மாநில அரசு பொய் வாக்குறுதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளது. ஆனால் அதனையும் செயல்படுத்தவில்லை.

தற்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என சொல்லி 60 சதவீதம் பேருக்கு அந்த தொகை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அமைச்சர்கள் நாளை யார் கோர்ட்டுக்கு போக வேண்டி உள்ளதோ? என்ற அச்சத்தில் உள்ளனர். டாஸ்மாக் அமைச்சர் தற்போது புழல் சிறையில் உள்ளார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியல் முன்னுரிமை கொடுத்தது பா.ஜனதா. தமிழக அமைச்சரவையில் தற்போது 34 அமைச்சர்களில் இரண்டு பெண் அமைச்சர்கள் தான் உள்ளனர். 2016 தேர்தலில் தி.மு.க. சார்பில் 8 பெண் வேட்பாளர்கள் தான் போட்டியிட்டனர். அது 2021-ல் 12 வேட்பாளராக மாறியது. இவர்கள் தான் பெண் உரிமை பற்றி பேசுகின்றனர். அவர்களுக்கு பெண்ணுரிமை என்றால் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது மட்டுமே. சிவன்மலை கிரிவலப்பாதையில் உள்ள கிரானைட் குவாரிக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்..

Updated On: 23 Sep 2023 5:42 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!