Begin typing your search above and press return to search.
நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருட்டு
வெள்ளகோவில் பகுதியில், நிதிநிறுவனத்தில் இருந்த ரூ. 2லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
HIGHLIGHTS
வெள்ளகோவில் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் சக்தி, சுபாஷ்; இவர்கள் அப்பகுதியில் உள்ள கடைவீதியில் நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். நேற்று நிதி நிறுவன அறைகளின் ஷட்டர் கண்ணாடி கதவை பூட்டிவிட்டு சென்றனர். மீண்டும் அவர்கள் திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. நிறுவனத்தில் உள்ளே இருந்த மேஜை ட்ராயர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்