Begin typing your search above and press return to search.
வெள்ளகோவிலில் 34 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
HIGHLIGHTS
வெள்ளகோவிலில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ௧௦-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து தேங்காய் பருப்பு ஏலம் எடுத்தனர். தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 102 க்கும், குறைந்தபட்சம் ரூ.76 க்கும் என மொத்தம் 34 லட்சத்து 19 ஆயிரத்துக்கு ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.